Anjali Nair: தவறாக நடக்க முயன்றார்.. ரயிலில் இருந்து தள்ளி கொல்ல முயன்றார்.. வில்லன் நடிகர் மீது நடிகை அஞ்சலி நாயர் புகீர் புகார்!

தமிழ் படத்தில் நடித்த போது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை அஞ்சலி நாயர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சலி நாயர்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன் இதுவும் கடந்து போகும், ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார் அஞ்சலி நாயர்.
​ Dhanush: தனுஷா இது? நீண்ட முடி… நீண்ட தாடி.. எடை கூடி அடையாளமே தெரியலயே!​
5 மாதங்களில் குழந்தைநடிகை அஞ்சலி நாயர் கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்ற இயக்குனரை திருமணம் செய்தார். ஆனால் சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்றனர். அனீஷுக்கும் அஞ்சலி நாயருக்கும் ஆவ்னி என்ற மகள் உள்ளார். 5 சுந்தரிகள் படத்தில் ஆவ்னி, அஞ்சலியின் மகளாகவே நடித்திருப்பார். இந்நிலையில் கடந்த ஆண்டு அஜித் என்கிற உதவி இயக்குனரை திருமணம் செய்துகொண்டார் அஞ்சலி நாயர். திருமணமான ஐந்தே மாதங்களில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர்.
​ Seeman: விஜய் டிவியில் சீமான்… ‘ஆத்தாடி என்ன உடம்பே’… பாட்டுப்பாடி அசத்தல்!​
வில்லன் நடிகர்இந்நிலையில் நடிகை அஞ்சலி நாயர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்றதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தான் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தனக்கு தமிழ் சரளமாக பேசத் தெரியும் என்பதால் தமிழ் படங்களில் அதிகம் நடிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். முதன் முதலில் தான் தமிழ் சினிமாவில் நடித்த போது அந்தப் படத்தில் வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். ​ Basil joseph: அப்பாவான ‘மின்னல் முரளி’ இயக்குநர்… பொண்ணுக்கு பேர் என்ன வச்சிருக்கார் பாருங்க!​
கொலை முயற்சிஅந்தப் படத்தில் அவர் இணை தயாரிப்பாளராக இருந்ததாகவும் படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் கூட தன்னை வெளியே செல்ல அனுமதிக்காமல், தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார் என்றும் கூறியுள்ளார் அஞ்சலி நாயர். தன்னை காதலிப்பதாக கூறியதோடு தான் எங்கு சென்றாலும் தன்னை ஃபாலோ செய்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு முறை தன்னை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்தாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகை அஞ்சலி நாயர். ​ Dharsha Gupta: மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து.. அந்த கேள்வியை கேட்ட தர்ஷா குப்தா.. குவியும் கமெண்ட்ஸ்!​
குற்றச்சாட்டால் பரபரப்புஅதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்து சென்ற அவர், வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாமல் போலீஸ் உதவியை நாடியதாகவும் பின்னர் கேரளாவுக்கே சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா நடிகர் குறித்து நடிகை அஞ்சலி நாயர் இப்படி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​ Amy Jackson: அந்தரங்க போட்டோவை வெளியிட்டு ரகசிய காதலை அம்பலப்படுத்திய எமி ஜாக்ஸன்!​
Anjali Nair

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.