திருமணத்திற்கு வற்புறுத்திய பெண் கழுத்து நெரித்து கொலை | Woman forced to marry strangled to death

தானே, மஹாராஷ்டிராவில் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த காவலாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள நவி மும்பையில், வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

இவற்றின் அருகில் உள்ள புதரில் இருந்து, 40 வயது பெண்ணின் உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தது ட்ராம்பே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் என தெரியவந்தது.

இவருக்கும், உடல் கைப்பற்றப்பட்ட பகுதி யில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் காவலாளியான, ராஜ்குமார் என்பவருக்கும் தொடர்பு இருந்தது, போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

‘பல நாட்கள் பழகிய நிலையில், திருமணம் செய்து கொள்ள அந்தப்பெண் வற்புறுத்தியதால், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன்’ என வாக்குமூலம் அளித்ததை அடுத்து, ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.