பெரியவர் பாக்கம் இராமகிருஷ்ணன் மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்!

பா.ம.க. மூத்த நிர்வாகி பாக்கம் இராமகிருஷ்ணன் மறைவுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், “பா.ம.க. மூத்த நிர்வாகி பெரியவர் பாக்கம் இராமகிருஷ்ணன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 

அவர் மருத்துவர் அய்யா அவர்களுடன் இணைந்து சமூகநீதிக்காக போராடி பலமுறை சிறை சென்றவர்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.”

 

மேலும் ஒரு இரங்கல் செய்தி :

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி :

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் திரு. A. ஜஸ்டின் செல்வராஜ் அவர்களுடைய மனைவி J. ஜூலியா ரெத்னாபாய் அவர்கள் வயது முதிர்வால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

பாசமிகு மனைவியை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்புச் சகோதரர் திரு. ஜஸ்டின் செல்வராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், திருமதி ஜூலியா ரெத்னாபாய் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.