வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த புதுச்சேரி-பெங்களூரூ விமான சேவை மீண்டும் துவங்கியது.
புதுச்சேரியிலிருந்து பெங்களுரூவிற்கும்,ஹைதராபாத்திற்கும் இடையே 80 பேர் பயணிக்கும் இரண்டு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படுகின்றன.
ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விமானம், அங்கிருந்து பெங்களூரூ செல்லும். பின்னர் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்லும்.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, கடந்த 10 நாட்களாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரூவிற்கு செல்லும் விமான சேவை மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. ஹைதராபாத்திற்கான விமான சேவை மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டது.
பெங்களூரூக்கான ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பராமரிப்பு முடிந்த நிலையில் நேற்று மீண்டும் புதுச்சேரி-பெங்களூரூக்கு விமான சேவை துவங்கியது. அதன்படி புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து விமானம் மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு, 2.50 மணிக்கு பெங்களூரூ சென்றடைந்தது.
பின் மீண்டும் 3.20 மணியளவில் பெங்களூரூவில் இருந்து புறப்பட்டு,புதுச்சேரி விமான நிலையத்தினை 4.15 மணிக்கு வந்தடைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement