Dhanush: ரஜினியால் தனுஷிற்கு நேர்ந்த அவமானம்..பழிதீர்த்த தனுஷ்..!

தனுஷ்
தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் தற்போது தொடர் வெற்றிகளை சந்தித்து வருகின்றார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இதனால் அப்சட்டில் இருந்த தனுஷிற்கு திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி புது உத்வேகத்தை தந்தது. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான நானே வருவேன் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடத்த வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. என்னதான் இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவினால் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. எனவே இப்படமும் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளது

எதிர்பார்ப்பு தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றிகளை பெற்று வருவதால் அவரின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவாகி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பலமடங்கு உயர்ந்துள்ளது.இதைத்தொடர்ந்து தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். பா.பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனராக களமிறங்கும் அப்படம் தனுஷின் ஐம்பதாவது படமாகும். கேங்ஸ்டர் படமாக உருவாகும் அப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜெ.சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கவுள்ளனர் . இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது

புதிய வீடு தற்போது தனுஷ் போயஸ் கார்டனில் மிகப்பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி குடியேறியுள்ளார். கிட்டத்தட்ட 150 கோடி மதிப்பிலான அந்த வீட்டை கடந்த இரண்டு வருடங்களாக பார்த்து பார்த்து காட்டியுள்ளார் தனுஷ். தன் தாய் தந்தையுடன் தனுஷ் அந்த வீட்டில் வசித்து வருகிறாராம். மிகப்பிரமாண்டமான அந்த வீட்டில் பல ஹைடெக்கான வசதிகள் இருக்கின்றதாம். வீட்டினுள்ளேயே ஜிம் , விளையாட்டு அரங்கம், ஹோமோ தியேட்டர் என அனைத்து வசதிகளும் இருக்கின்றதாம். மேலும் ஒவ்வொரு அறையிலும் பல லட்சங்களில் இன்டீரியர் வேலைகள் செய்யப்பட்டு உள்ளதாம். இதைத்தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து பல பொருட்களை வரவழைத்து வீட்டை மேலும் அலங்காரப்படுத்தி இருக்கின்றார் தனுஷ். இதுபோல ஒரு ஹைடெக்கான வீட்டை கட்டுவது தனுஷின் பல நாள் ஆசையாக இருந்து வந்ததாம்

காரணம் தனுஷ் மிகப்பிரமாண்டமான வீட்டை அதுவும் போயஸ் கார்டனில் கட்டியுள்ளதற்கு குறிப்பிட்ட காரணம் இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. தன் முன்னாள் மாமனார் ரஜினியின் வீட்டிற்கு அருகிலேயே தனுஷ் இந்த வீட்டை கட்டியுள்ளார். அதற்கு முழு காரணம் ரஜினி தான் என ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ரஜினி தனுஷையும், அவரது குடும்பத்தாரையும் சில சமயங்களில் இரண்டாம் தரத்தில் தான் நடத்தினாராம். இதன் காரணமாக தனுஷிற்கும் ரஜினிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. எனவே தான் ரஜினியை விட மிகப்பிரமாண்டமான வீட்டை கட்டி அதில் தன் தாய் தந்தையுடன் குடியேற திட்டமிட்டுள்ளார் தனுஷ். இதன் காரணமாகவே ரஜினியின் வீட்டிற்கு அருகிலேயே மிகப்பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி தனுஷ் குடியேறியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.