இந்தூர் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தூர்,

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சில் சிக்கித்தவித்த இந்திய அணி, 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 31 ரன்களிலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 26 ரன்களிலும் அவுட்டாகினர். இந்த நிலையில்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலை வகித்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி உமேஷ் யாதவின் வேகத்திலும், அஸ்வின் சுழலிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.