Vaadivaasal: `வாடிவாசல் கதை குறித்து வெற்றிமாறன் சொன்ன தகவல் இதுதான்' – மிஷ்கின்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகப்போகும் திரைப்படம் ‘வாடிவாசல்’.

சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் தற்போது இப்படத்திற்கான திரைக்கதைப் பணிகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘The Proof’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்தும் இளையாராவின் பயோபிக் குறித்தும் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், “இளையராஜா மிகப்பெரிய லெஜெண்ட். தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். அது தனுஷுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கு மிகவும் பிடித்தவர். அந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வெற்றிமாறனை சமீபத்தில் பார்த்தேன். அப்போது ‘வாடிவாசல்’ படம் பற்றி அவரிடம் கேட்டேன்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட் பூஜையின் போது..

‘வாடிவாசல்’ நாவலில் திரைப்படமாக்கும் அந்தப் பகுதியை மட்டும் எனக்குச் சொன்னார். இந்தியாவின் மிகப்பெரியப் படைப்பாக ‘வாடிவாசல்’ திரைப்படம் இருக்கும். சூர்யா மிகச் சிறந்த நடிகர். இப்படத்திற்குப் பிறகு அவர் ஒரு லெஜெண்டாகிவிடுவார். வெற்றிமாறன் அப்படியொரு படத்தை எடுக்கப் போகிறார்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.