Ponniyin Selvan 2:ஹேய் எப்புட்றா… குந்தவையாக மாறிய திரிஷாவின் வேறலெவல் வீடியோ.!

கோலிவுட் திரையுலகின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் நீண்ட கால கனவை மணிரத்னம் நிறைவேற்றினார். கடந்த ஆண்டு வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. கடந்தாண்டு ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் அடுத்த மாதம் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் தாறுமாறான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் படமாக உருவானது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது இந்தப்படம். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரம்மாண்டமாக வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி,சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் இந்தப்படத்தில் நடித்தனர். மல்டி ஸ்டார் படமாக ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியானது. இந்தப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே, இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார் மணிரத்னம்.

இரண்டு பபாகங்களாக உருவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்தார். இந்தப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அமோக ஓபனிங் கிடைத்தது. இந்தப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Maaveeran: போடு வெடிய.. ‘மாவீரன்’ படம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவின் தோற்றம் எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். படத்திற்கு பின்னால் திரிஷா குந்தவையாக மாறியது எப்படி என்பதை பாருங்கள் என குறிப்பிட்டு இந்த காணொளி வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்தப்படத்தின் முதல் சிங்கிள்விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Viduthalai: கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாரு: வெற்றிமாறன் குறித்து விஜய் சேதுபதி சொன்ன விஷயம்.!

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாகத்திற்கான பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இது படத்தின் புரமோஷனுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அந்த வலையில் இரண்டாம் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.