கோண்டியா, மஹாராஷ்டிராவில் துவக்கப்பள்ளி மாணவியரிடம் ஆபாச ‘வீடியோ’க்களை காட்டிய ஆசிரியரை, ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள டாங்கோர்லி கிராமத்தில் செயல்படும் துவக்கப்பள்ளியில் 52 வயது ஆசிரியர் பணியாற்றி வந்தார்.
இவர், சமீபத்தில் தன் வகுப்பறையில் இருந்த மாணவியரிடம், ‘மொபைல் போனில்’ ஆபாச வீடியோக்களை காட்டியதுடன், அவர்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதை, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட நிலையில், அவர் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியரை, போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement