கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் தீ விபத்து.. 10-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் எரிந்து நாசம்..!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே கடற்கரை பகுதியில் நிறுத்திவைக்க பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

கருங்கல் அருகே உள்ள மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கரை ஒதுக்கி கட்டி வைத்துள்ளனர். இதில் ஒருபடகில் பற்றிய தீ மற்ற படகுகளுக்கும் பரவி சேதமடைந்தன.

தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்த போதும், பத்துக்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகின. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.