வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரிய ராணுவத்தினருடன் அமெரிக்கா கூட்டு போர் பயிற்சி

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி,  தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு போர் ஒத்திகை நடத்தியுள்ளது.

சியோல் அருகே உள்ள யோன்சியோன் பகுதியில் இருக்கும் ஆற்றை கடந்து படையணிகளை கொண்டு செல்வது, இதற்காக தற்காலிக பாலம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த பயிற்சியில் அமெரிக்கா, தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 400 வீரர்கள் கலந்து கொண்டதுடன், 2 அபாச்சி ஹெலிகாப்டர்கள், 50 ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.