மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கின்றார். கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு அதே சமயத்தில் அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படி இவரின் படங்கள் அமைந்துள்ளது.
இதன் காரணமாகவே இவரின் படங்களுக்கும். இவரின் இயக்கத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. மேலும் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் எளிமையாக லோகேஷ் நடந்துகொள்வது இவரின் தனி சிறப்பு.
இந்நிலையில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகின்றார். விக்ரம் படத்திற்கு பிறகு பல மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்கள் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தனர். இருந்தாலும் லோகேஷ் மீண்டும் விஜய்யுடனே கூட்டணி அமைத்தார்.
AK62: அடப்போங்கப்பா..நீங்களும் உங்க AK62வும்..மன உளைச்சலுக்கு ஆளான மகிழ் திருமேனி..!
மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் மாதம் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் லோகேஷ் OVERRATED இயக்குனர் என ஒரு டீவீட்டை போட்டிருந்தார்.
இந்த டீவீட்டை பார்த்த லோகேஷ் ஒரு லைக் ஒன்றை போட்டு அந்த ரசிகருக்கு அதிர்ச்சியளித்தார். தன்னை விமர்சனம் செய்து ஒருவர் ட்வீட் போட்டிருந்ததை அடுத்து லோகேஷ் அந்த டீவீட்டிற்கு லைக் போட்டது அவரின் மீதான மரியாதையை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதில் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனனின் பகுதி முடிவடைந்ததை அடுத்து தற்போது சஞ்சய் தத் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகும் லியோ படத்தில் விஜய் ஒரு கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.