சென்னை: தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விக்ரமின் ‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்த புதுச்சேரி அரசின் உத்தரவை எதிர்த்து பட விநியோக நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும் என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.