திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணையை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகர திமுக சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வர்களை தேர்ந்தெடுத்து பணி ஆணைகளை உடன் வழங்கினர்.
பணி ஆணைகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் , நகர செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.எஸ். பாண்டியன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் வழங்கினர். முகாமில் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர், நகர இளைஞர் நிர்வாகிகள் வசந்த், கமல், மணிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் எஸ். பி.பாஸ்கர், சேது முருகானந்தம், வினோத்குமார், பரமேஷ்வரன், சேகல் முருகையன், நகர்மன்ற உறுப்பினர்கள் சக்தி, ஜாகிர், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.