படத்திலும் இல்லை..நிஜத்திலும் இல்லை..விரக்தியில் பேசிய சிம்பு..!

தமிழ் சினிமாவில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நடிகர் தான் சிம்பு. எப்போதும் இவரை சுற்றி சர்ச்சையும் பரபரப்பும் இருந்து வரும். ஆனால் சமீபகாலமாக சிம்பு புது வெர்ஷனுக்கு மாறியுள்ளார் என்றே சொல்லலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வரும் சிம்பு திரைவாழ்க்கையிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றார்.

மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிகளுக்கு பிறகு சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leo: லியோ படப்பிடிப்பில் நடப்பதெல்லாம் பார்த்த சந்தேகமா இருக்கே..குழப்பத்தில் ரசிகர்கள்..!

இப்படத்தின் வெற்றியின் மூலம் சிம்பு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வார் என அவரது ரசிகர்களால் நம்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் சிம்பு பேசிய பேச்சு அவரது ரசிகர்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.நான் கஷ்டப்பட்டபோது நீங்கள் என்னுடன் இருந்தீர்கள், இனிமேல் நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் பாடல் பாடி நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார் சிம்பு.

இந்நிலையில் அவர் படத்திலும் எனக்கு ஜோடி இல்லை நிஜத்திலும் எனக்கு ஜோடி இல்லை என பேசியது தான் தற்போது செம வைரலாகி வருகின்றது. தற்போது 39 வயதாகும் சிம்புவிற்கு திருமணம் எப்போது என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருக்கின்றது. எனவே பத்து தல படத்திலும் எனக்கு ஜோடி இல்லை, நிஜத்திலும் எனக்கு ஜோடியில்லை என பேசியுள்ளார் சிம்பு.

மேலும் இதைத்தொடர்ந்து எனக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையும் இல்லை என கூறியுள்ளார். இதைப்பார்த்த இவரது ரசிகர்கள் கவலைப்படாதீங்க தலைவா, சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் நடக்கும் என ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு சிம்பு ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் மிகப்பிரமாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.