ஆண்டவர் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படத்தின் கதை இதுவா.?: கமலின் வேறலெவல் திட்டம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பல படங்களை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக வெளியிட்டராகவும் திகழ்ந்தவர்
உதயநிதி ஸ்டாலின்
. அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தீவிர அரசியலில் ஈடுபடுவாக கூறிவிட்டு, சினிமாவை விட்டு முழுவதுமாக விலகினார். அண்மையில் இவர் நடித்திருந்த ‘கண்ணை நம்பாதே’ படம் வெளியானது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்த படம் ‘கண்ணை நம்பாதே’. நான்கு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்தப்படம் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ‘கண்ணை நம்பாதே’ படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனிடையில் ‘மாமன்னன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அத்துடன் வடிவேலு இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலுவின் கேரக்டர் அழுத்தமானதாகவும், அவர் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த கதையில் உதயநிதி நடிப்பது தான் சரியாக இருக்கும் என்றெல்லாம்
கமல்
சொல்லியிருந்தார். இந்நிலையில் தான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு ‘மாமன்னன்’ தன்னுடைய கடைசி படம் என்றும் கமல் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த படம் கைவிடப்படுவதாகவும் அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

Suriya 42:விக்ரம், லியோ பாணியில் ‘சூர்யா 42’: வெளியான வெறித்தனமான அப்டேட்.!

இந்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் 70 வருட வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் விதமாக புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. மதுரையில் நடைபெறும் இந்த கண்காட்சியை அமைச்சர் மூர்த்தியுடன் பார்வையிட்டார் நடிகர் வடிவேலு. அதன் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், இங்கு இருக்கும் அனைத்தும் நமக்கு பாடம். முதலைமைச்சர் ஸ்டாலின் எல்லா தலைவர்களுடனும், சிறைச்சாலையில் இருப்பதை போன்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலைமைச்சரின் சிறை வாழ்க்கை குறித்த படத்தில் உதயநிதி நடித்து கமல் தயாரிப்பதாக இருந்தது. இந்தப்படத்திற்கு ‘மிசா’ என டைட்டிலும் வைக்கப்பட்டது. ஆனால் திடீரென உதயநிதி ‘மாமன்னன்’ தன்னுடைய கடைசி படம் என அறிவித்துவிட்டார். முதலமைச்சரின் வாழ்க்கை குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலினை கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம் எனவும் தெரிவித்துள்ளார் வடிவேலு. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kavin: அடுத்த சிவகார்த்திகேயன்னு சொன்னதுக்காக இப்படியா.?: மாஸ் காட்டும் கவின்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.