கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: இறுதிகட்டத்தை நெருங்கும் விசாரணையில் அடுத்த அப்டேட்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை மாவட்ட நீதிபதி ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
image
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் வழக்கறிஞர்களாக ஆஜராகினர். வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர். இவ்வழக்கின் விசாரனை தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் தரப்பில் “மேலும் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. மின்னணு சார்ந்த தொலைத்தொடர்பு குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆகவே கால அவகாசம் வேண்டும்” என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டார்.
image
இதனை ஏற்ற மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன், வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.