ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்: நுரையீரல் தொற்றால் அவதி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 15ஆம் தேதி உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஏற்கெனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அவருக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் செயற்கை ஆக்ஜிசன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.