எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்



அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைய குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருளின் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் இதனை தெரிவித்திருந்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.