அடிக்கடி தகராறு.. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.. ராணிப்பேட்டையில் சோகம்.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (50). இவருடைய மனைவி ராதா. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ஏரி பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சடைந்து இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராஜாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.