சாக்லேட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 2 பேர் பலி, 9 பேர் மாயம்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பெல்சின்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் மாயமாகினர். மாயமான 9 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெடிவிபத்தால் சாக்லேட் தொழிற்சாலை நிலைகுலைந்ததால் மாயமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.