“நீங்கள் வந்ததால் தான் அத்தனை அதிகாரிகளும் இங்கு வந்துள்ளனர்” விருதுநகர் ஆட்சியரிடம் குறைகளை கொட்டித் தீர்த்த மலைவாழ் பெண்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஆட்சியரிடம், பெண் ஒருவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையெனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நடமாடும் நியாய விலைக்கடையை துவக்கி வைக்க பட்டுப்பூச்சி ஜெயந்தி நகர் பகுதிக்கு சென்ற ஆட்சியர் ஜெயசீலனிடம், மக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கினர்.

அப்போது பேசிய மலைவாழ் பெண் ஒருவர், நீங்கள் இங்கு வந்ததால் தான் இத்தனை அதிகாரிகளும் இங்கு வந்துள்ளதாகவும், தங்களது குறைகளை கேட்க எந்த அதிகாரிகளும் வருவதில்லை எனவும் ஆட்சியரிடம் கொந்தளித்தார்.

அதனைக் கேட்டுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.