புதிய வந்தே பாரத் ரயில் திருப்பதியில் ஏப்.8-ல் தொடங்குகிறது

திருப்பதி: ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் விசாகப்பட்டினம் – செகந்திராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த பொங்கல் பண்டிகை முதல் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், திருப்பதி – ஹைதராபாத் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தென் மத்திய ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி திருப்பதியில் இருந்து வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு செகந்திராபாத்தில் உள்ள தென் மத்திய ரயில்வே மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக திருப்பதி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.