வடைக்கு ஆசைப்பட்டு ரூ.70 ஆயிரத்தை பறிகொடுத்த விவசாயி.. பைக்கில் இருந்த பணத்தை அபேஸ் செய்த ஹோட்டல் தொழிலாளி கைது..!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில், வடை வாங்க சென்ற முதியவரின் இருசக்கரவாகனத்தில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்ற நபரை, சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த விவசாயி வேலு, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை மீட்பதற்கு சென்றுள்ளார்.

ஊழியர்கள், நகையை இன்று திருப்ப முடியாது என கூறியதால், பணத்தை பைக்கிலேயே வைத்துவிட்டு, அருகிலுள்ள டீ கடைக்கு வேலு வடை வாங்க சென்றுள்ளார்.

வடை இல்லாததால் திரும்பி வந்த அவர், பைக்கில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசில் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தளவாய்புரத்தை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி சரவணன் என்பவரை கைது செய்து பணத்தை மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.