திருவள்ளூரில் அதிர்ச்சி.! 4ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை…!

திருவள்ளூர் மாவட்டத்தில் தந்தை படிக்கக் கூறியதால் 4ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் பிரதிக்ஷா(10) தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பிரதிக்ஷா அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி, பிரதிக்ஷாவை கண்டித்து வீட்டிற்குச் சென்று படிக்கமாறு கூறி, வீட்டின் சாவியை பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு, மனைவியுடன் வெளியே சென்றுள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பிரதிக்ஷா வீட்டு ஜன்னலில் துண்டால் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக பிரதிக்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.