இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை

நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் செயற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையில் சென்றவர்களாக கருதப்படுவர் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபன வளாகம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய வளாகம் என்பன அவர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து ஊழியர்களும் சேவைக்கு சமூகமளித்து எரிபொருள் விநியோக நடவடிக்கைகளையும், ஏனைய சேவைகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.