மேக்கப்பில் பெண்களையே தோற்கடித்த ஆண்கள்! வைரலாகும் புகைப்படம்!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர், பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் பின்பு ஆண்களும் – பெண்கள் போல் வேடமிட்டு அலங்காரம் செய்து வழிபாடுகள் செய்யவும் தொடங்கியுள்ளனர்.ம் வருடந்தோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியாவிலிருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவில் வந்து பெண்கள் போல் வேடமணிந்து, அலங்காரமும் செய்து சமைய விளக்கு என்னும் சடங்கை செய்வது வருகின்றனர். 

அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்ட ஆண்கள் – பெண்கள் போல் வேடம் அணிந்து கொள்ளை அழகுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆடை- அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான கலைஞர்களும் அதே பகுதியில் குவிந்தனர். வேண்டுதலுக்காக  வருபவர்களும் – வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனை செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வருடம் தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். 

இங்கு வரும் ஆண்கள் – பெண்களை விட மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் அலங்காரம் செய்து கையில் விளக்குடன் இந்த கோவிலை வலம் வருவர். தன்னுடன் வரும் தனது மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் இருக்கும். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள் மேல் மரியாதையும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களது அழகில் மயங்கிய பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்து சென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.