Ravi Kishan: சூப்பர் ஸ்டாரை படுக்கைக்கு அழைத்த பெண் பிரபலம்: அவர் பெயர்…

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
போஜ்புரி, இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் ரவி கிஷன். போஜ்புரி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார். டி. ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிசா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தில் நடித்திருக்கிறார்.

படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது போஜ்புரி ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருக்கும் ரவி கிஷன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரவி கிஷனிடம் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

Naga Chaitanya: லண்டனில் பொன்னியின் செல்வன் 2 பட நடிகையுடன் சமந்தாவின் மாஜி கணவர்: வைரல் போட்டோ

ஆமாம். அது எனக்கும் நடந்திருக்கிறது. திரையுலகில் அது நடந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு வழியாக எஸ்கேப் ஆகிவிட்டேன். நேர்மையாக உழைக்க வேண்டும் என என் தந்தை எனக்கு கற்றுத் தந்தார். அதனால் குறுக்கு வழியில் செல்லும் பழக்கம் எனக்கு இல்லை. நான் திறமையானவன் என்பது எனக்கு தெரியும் என்றார்.

உங்களை யார் சார் படுக்கைக்கு அழைத்தது, அவரின் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டார். ரவி கிஷன் கூறியதாவது,

அந்த பெண்ணின் பெயரை சொல்ல முடியாது. அவர் தற்போது பெரிய ஆள். இன்று இரவு ஒரு கப் காஃபி சாப்பிடலாம் வாங்க என்றார். பகல் நேரத்தில் தானே காஃபி குடிப்போம் என்று தோன்றியது. அதன் பிறகே அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்து, செல்ல மறுத்துவிட்டேன் என்றார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

வழக்கமாக நடிகைகளை தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பார்கள். இங்கு ஒரு நடிகரையே அழைத்திருக்கிறார்களே. அதுவும் ஒரு பெண் அழைத்திருக்கிறார். யாராக இருக்கும் அந்த பிரபலம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு வரச் சொன்னதாக சொல்லும் முதல் நடிகர் ரவி கிஷன் இல்லை. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கையும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். அதை அவர் தைரியமாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ரன்வீர் சிங் கூறியதாவது,

ஒரு மார்க்கமான இடத்திற்கு ஒருவர் என்னை அழைத்தார். நீ கடின உழைப்பாளியா இல்லை ஸ்மார்ட்டா என்று கேட்டார். நான் ஸ்மார்ட் இல்லை என்று நினைத்தேன். அதனால் நான் கடின உழைப்பாளி என அவரிடம் கூறினேன். அதற்கு அவரோ, டார்லிங், ஸ்மார்ட்டாக, செக்ஸியாக இரு என்றார்.

நடிக்க வந்த முதல் மூன்றரை ஆண்டுகளில் இது போன்ற அனுபவங்கள் எல்லாம் ஏற்பட்டது. அதை எல்லாம் நினைக்கும்போது தான் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளின் அருமை தெரிகிறது என்றார்.

சில முன்னணி நடிகைகளே தங்களை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என்று தெரிவித்தனர். ஏன், லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவே, தன்னை ஒரு பிரபலம் படுக்கைக்கு அழைத்தாக கூறினார். அதை கேட்டு ரசிகர்கள் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.