ஓபிஎஸ் மேல்முறையீடு; ஒருநாள் தள்ளி போச்சு… இன்று நடக்கும் வழக்கு விசாரணை!

அதிமுகவின் பொதுச் செயலாளராக

பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வந்ததும் எல்லா விஷயங்களும் அதிரடியாக நடக்கத் தொடங்கின. அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வ சான்றிதழை எடப்பாடி கையில் கொடுக்க, அதன்பிறகு நடந்த விஷயங்கள் எல்லாம் மாறி மாறி தலைப்பு செய்திகளானது.

அவ்வளவு தான் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என சில கொந்தளிக்க, அவரோ மீண்டும் சட்டப் போராட்டத்திற்கு தயாராகி விட்டார். சிவில் உரிமையியல் வழக்கு என்பதால் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து போராட சட்டம் கதவுகளை திறந்து வைத்திருக்கிறது. அதன்படி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும்,

பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து

உள்ளிட்ட நான்கு பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

ஆனால் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் நகல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று (மார்ச் 30) பட்டியலிட இரண்டு பேர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. மற்ற மூவரின் மனுக்களும் பட்டியலிடப்படவில்லை.

அவற்றையும் சேர்த்து நேற்று பிற்பகலே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் நீதிபதிகள் மறுத்து விட்டனர். இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கறாராக தெரிவித்துவிட்டனர். தனி நீதிபதி உத்தரவின் நகல் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு கிடைத்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெறும் விசாரணையில் எந்தவித பிரச்சினையும் இருக்காது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.