ரஷ்யா, உக்ரைன் இடையே அதிகரித்துள்ள ட்ரோன் தாக்குதல்கள்.. எதிரி வீரர்களைக் கண்டறிந்து, டேங்குகள் மீது குண்டு வீசும் ட்ரோன்கள்!

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிநவீன ட்ரோன்கள் மூலம் அதிகப்படியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த ஒரு வருடத்தில், ,இத்தகைய ட்ரோன்கள் போரின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர் நாட்டு வீரர்கள் பதுங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிதல், டேங்குகள் மீது சிறிய குண்டுகளை வீசி பெரும் சேதத்தை விளைவித்தல் போன்றவை ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் முன்னணித் தாக்குதல்களாகும்.

க்ரோன்ஸ்டட், ஆர்லன் 10, எலரான் 3 உள்ளிட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவும், பேரக்டர், DJI மேவிக், ஸ்விட்ச் ப்ளேடு போன்ற இலகு ரக ட்ரோன்கள் மூலம் உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அளவில் சிறியதாக இருப்பதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும் ட்ரோன் தாக்குதல்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டாலும், ட்ரோன்கள் தாக்குதலால் ரஷ்யாவை விட உக்ரைனே அதிக பலனைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.