நியூசிலாந்தில் இளம்பெண் ஒருவர் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு, அவரது காருக்குள் வைத்து உயிருடன் கொளுத்தப்பட்ட நிலையில் சடலமாக கீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்
நியூசிலாந்தில் வழிபோக்கர் ஒருவரே, 18 வயதான அரிகி ரிக்பி என்பவரின் கருகிய உடலை முதன்முதலில் பார்த்துள்ளார்.
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், முதலில் ஆடு ஒன்று தீயில் கருகியதாகவே கருதியுள்ளனர்.
Photo / Neil Reid
விரிவான விசாரணைக்கு பின்னரே அது அரிகி ரிக்பி என்பவரின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமது உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்ற அரிகி ரிக்பி வன்முறை குழு ஒன்றின் பிடியில் சிக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.
ஆக்லாந்தில் உள்ள தமது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல அவள் திட்டமிட்ட நாளில் அவள் உயிர் பறிக்கப்பட்டது என அவரது சகோதரி அனஹேரா ரிக்பி தெரிவித்துள்ளார்.
அரிகி ரிக்பியின் கொலைகாரர்கள் பொலிசரிடம் சிக்காமலிருக்க அவர்களுக்கு மர்ம நபர்களால் உதவப்பட்டு வருகிறது எனவும் அனஹேரா ரிக்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 3ம் திகதி, கருகிய நிலையில் கார் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் முதற்கட்ட விசாரணையில், அந்த காருக்குள் மனித சடலம் காணப்படுவதை உறுதி செய்ய பொலிசார் திணறியுள்ளனர்.
Photo / Neil Reid
காருக்குள் காணப்படுவது மனித உடல்
இரண்டு நாட்களுக்கு பின்னர் வழிபோக்கர் ஒருவர், அந்த காருக்குள் காணப்படுவது மனித உடல் என்பதை உறுதி செய்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். மட்டுமின்றி, அரிகியின் எலும்புகள் நொறுங்கியிருப்பதும், உடைக்கப்பட்டிருப்பதையும் அந்த நபர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 22ம் திகதி அரிகி கொலை தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அரிகி கொலையில் உண்மையான குற்றவாளிகள் சிக்காதவரையில், நமது தெருக்கள் பாதுகாப்பற்றவையாகவே இருக்கும் என அனஹேரா ரிக்பி தெரிவித்துள்ளார்.
Photo: Relatives