வரப்போகும் குருப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரருக்கு எப்படி அமையப்போகிறது!



 நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும்.

அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது.

இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு இருக்கையில் குரு பகவனால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலப்பகுதி எவ்வாறு அமைய போகின்றது என்று பார்க்கலாம்.

தனுசு
குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசியிக்கு 4ம் வீட்டிலிருந்து 5ம் வீடான பூரவக்குடி ஸ்தானத்தில் அமர இருக்கின்றார்.

அதனால் ஏற்பட போகும் பலன்களை பார்ப்போம்.

பலன்கள்

உங்களுக்கான கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் ஆரம்பமாகிறது.

இழுபறியான திருமண முயற்சிகள் சீக்கிரம் நிறைவேறும்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு கழந்தை பாக்கியம் உருவாகும்.

வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

சொந்த வீடு வாங்குவீர்கள்.

மாணவர்கள் நல்ல முறையில் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேறுவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

பணிமாற்றங்கள் மற்றும் இடமாற்றங்கள் ஏற்படலாம்.

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.