வடக்கு, கிழக்கை முடக்குவோம்! அமைச்சர்கள் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் – பகிரங்க எச்சரிக்கை



புத்த சாசனம், மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒரு இனவாதி என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் எங்கு மலைகளைக் கண்டாலும் புத்தரை அமரவைப்பது தான் வேலை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தொல்லியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முடக்குவோம், இனவாத அமைச்சர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்க வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.