Samantha:: எதையும் மறக்க விரும்பல, வம்புல சிக்க விரும்பல: மாஜி கணவரை சொல்கிறாரா சமந்தா?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா.

படம் தொடர்பாக பேட்டிகளும் அளிக்கிறார். அந்த பேட்டிகளில் தனக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையேயான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது பற்றியும் பேசி வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கடந்த கால அனுபவங்களில் எதையாவது மறக்க விரும்புகிறீர்களா என சமந்தாவிடம் கேட்கப்பட்டது. என் கடந்த கால ரிலேஷன்ஷிப் பற்றி கேட்கிறீர்களா என பதிலுக்கு கேள்வி கேட்டார் சமந்தா. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பேட்டி எடுத்தவர் கூறினார்.

அதற்கு சமந்தா கூறியதாவது,

நீங்கள் என்னை வம்பில் சிக்க வைக்கிறீர்கள். நான் எதையுமே மறக்க விரும்பவில்லை. ஏனென்றால் அனைத்துமே எனக்கு ஏதாவது பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதனால் மறக்க விரும்பவில்லை என்றார்.

சமந்தா பொதுவாக பதில் அளித்தாலும் அவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்தது பற்றி தான் பேசியிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

கடந்த சில நாட்களாக நாக சைதன்யாவுடன் வாழ்ந்தது பற்றி பேசி வருகிறார் சமந்தா. அதே சமயம் மீண்டும் அவருடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார்.

முன்னதாக லவ் பற்றி சமந்தா கூறியதாவது,

லவ் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயானது தான் என்று இல்லை. கடந்த 8 மாதங்களாக எனக்கு ஆதரவாக இருந்து வரும் நட்பு வட்டாரத்தின் லவ் தான் எனக்கு பெரிதாக உதவிக் கொண்டிருக்கிறது. ஒரு உறவு தோல்வி அடைந்ததால் நான் மோசமாக மாற வேண்டும் என்று இல்லை என்றார்.

சாகுந்தலம் படத்தை விளம்பரம் செய்ய கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார் சமந்தா. அங்கு பேசிய அவர், மலையாள நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பது நடிப்பு பள்ளிக்கு செல்வது போன்றாகும். நான் ஒரே மாதிரியாக நடிப்பதாக தோன்றினால் உடனே மலையாள படங்களை தான் பார்ப்பேன் என்றார். அவர் கூறியதை கேட்டு சேட்டன்மார்களும், சேச்சிகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Naga Chaitanya: லண்டனில் பொன்னியின் செல்வன் 2 பட நடிகையுடன் சமந்தாவின் மாஜி கணவர்: வைரல் போட்டோ

இதற்கிடையே நாக சைதன்யாவும், பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்திருக்கும் சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக மீண்டும் பேச்சு கிளம்பியது. அது குறித்து அறிந்த சமந்தா, நாக சைதன்யாவை பற்றி காட்டமாக பேசியதாக செய்தி வெளியானது. அந்த செய்தியை ட்விட்டரில் பார்த்த சமந்தா, நான் அப்படி சொல்லவே இல்லை என்றார்.

சாகுந்தலம் ரிலீஸானதும் விஜய் தேவரகொண்டாவின் குஷி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சமந்தா. மேலும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரிலும் நடித்து வருகிறார். அந்த தொடரில் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து வருகிறார்.

சமந்தாவுடன் பாலிவுட் நடிகர் வருண் தவானும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் தொடரான சிடாடலின் இந்திய வெர்ஷனில் தான் சமந்தா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் சிடாடலில் ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.