எம்.பி., எம்.எல்.ஏ.வை வரவேற்க பட்டாசு வெடித்த தொண்டர்கள்; சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஹாமம் மாவட்டம் ஷிமலப்பேடு கிராமத்தில் பாரதிய ராஷிடிரிய சமிதி கட்சி சார்பில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அப்போது, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வரவேற்க கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தனர். அப்போது, பட்டாசு தீப்பொறி அருகில் உள்ள ஒரு குடிசையின் கூரை மீது விழுந்து தீப்பற்றியது. குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டரிலும் தீப்பற்றி அது வெடித்து சிதறியது.

இதில், குடிசை முழுவதும் தரைமட்டமானது. மேலும், குடிசை அருகே நின்றுகொண்டிருந்த கட்சி தொண்டர்கள் பலரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ரமேஷ், மங்கு ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.