Rajinikanth: நடிகர் என்று குறிப்பிடாமல்.. நண்பர் என்று சொன்னது… ரஜினியால் உருகும் சசிகுமார்!

அயோத்தி

அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான படம் அயோத்தி. இந்தப் படம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்

பாராட்டு

மனிதம் மற்றும் மத நல்லிணக்கத்தை பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. வசூல் ரீதியாக பெரிதாக பேசப்படாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது அயோத்தி திரைப்படம். இந்நிலையில் அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

Ayothi: சசிகுமாரின் அயோத்தி படத்தை புகழ்ந்த ரஜினிகாந்த்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

நண்பர் சசிகுமார்

அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டினார்.

நண்பர் என்று சொன்னது

ரஜினிகாந்தின் இந்த டிவிட்டை பார்த்த நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். அதில், நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் என குறிப்பிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth: அந்த புதைந்து போன குப்பை… ஐஸ்வர்யா காதல் குறித்து ரஜினி சொன்னது.. பயில்வான் பகீர்!

மீசை தாடி வைத்த குழந்தை

மேலும் #SuperStar #PettaMalik என்ற ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார். நடிகர் சசிகுமாரும் நடிகர் ரஜினிகாந்தும் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்தனர். பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருந்தார் சசிகுமார். நடிகர் ரஜினிகாந்துக்கும் சசிகுமாரை ரொம்பவே பிடிக்கும். பேட்ட படத்தின் விழாவில் கூட சசிகுமார், மீசை தாடி வைத்த ஒரு குழந்தை என்றும் தங்கமான மனிதர் என்றும் பாராட்டினார்.

ரஜினி ரசிகர்

மேலும் இப்படி ஒரு தங்கமான மனிதர் கிடைப்பாரா என்று நினைக்கும் அளவுக்கு நல்ல மனிதர் சசி குமார் என்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றும் ஆசிர்வாதம் செய்தார் ரஜினிகாந்த். சசிகுமாரும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். சசிகுமாரின் சுந்தர பாண்டியன் படத்தில் கூட ரஜினிகாந்தின் இன்ஃபுளுயன்ஸ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha: ‘த்ரிஷாவுக்கும் எனக்கும் கல்யாணம்.. லியோ படத்தில் இருந்து அவளை நீக்குங்கள்’ பரபரப்பை கிளப்பும் பிரபலம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.