நல்ல குடும்பத்துல பிறந்த.. உச்சக்கட்டத்தை எட்டும் பிக்பாஸ் அபிராமி, குட்டி பத்மினி மோதல்..!

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா கல்லூரி ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மிகப்பெரிய சர்ச்சைகள் எழுந்தது. இதனால் அங்கு படிக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பிக்பாஸ் நடிகை அபிராமி.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
கலாஷேத்ரா கல்லூரி மாணவியான அபிராமி வெங்கடாசலம், ஹரிபத்மனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இதுதொடர்பாக பேசிய அவர், எப்போதும் ஒரு பக்கத்தை கேட்டு முடிவு செய்யக்கூடாது. 89 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் நானும் படித்துள்ளேன். கலாஷேத்ரா என்ற பெயரை உச்சரிக்க தெரியாதவர்கள் எல்லாம் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவது வருத்தமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சைகளை கிளப்பியது. பாதிக்கப்பட்ட மாணவிகளை அசிங்கப்படுத்தும் விதமாக அபிராமி பேசுவதாகவும், கலாஷேத்ரா என உச்சரிக்க தெரிந்தவர்கள் மட்டும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை என்றும் அபிராமியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மேலும் அபிராமி கலாஷேத்ரா கல்லூரிக்கு முட்டு கொடுப்பதாகவும் சினிமா துறையை சார்ந்த சிலரே விமர்சனம் செய்தனர். இந்நிலையில் அண்மையில் அபிராமி கொடுத்த பேட்டியில், ஹரி பத்மனுக்கு எதிராக பேச மாணவர்களை ஆசிரியர்கள் மூளை சலவை செய்கின்றனர். என்னிடமே சிலர் கல்லூரிக்கு எதிராக பேச சொன்னார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த குட்டி பத்மினியும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Lingusamy: இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!

அதில், உங்களை போன்ற சிலர் சினிமாவில் இருக்கிறீர்கள். அதனால் பிறர் தொடும்போது உங்களுக்கு அந்த பீல் இருக்காது. ஆனால் அங்கு போராட்டம் செய்யும் மாணவிகள் அப்படி இல்லை. நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் அவர்கள். அவுங்களோட பிரச்சனையை இப்படி சாதரணமா சொல்லிட்டீங்க என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அபிராமி.

அதில், சினிமா துறையில் உள்ள எல்லா பெண்களும் உங்களை போல் கிடையாது. உங்களுக்கு எந்த பீலும் இல்லாததது வருத்தம் தான். உங்களுக்கே பத்திட்டு வருதுனா நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்வளவு எரியும் ஆண்ட்டி. நாங்க பார்த்துக்கிறோம் ஆண்ட்டி. வயசான காலத்துல உங்க உடம்பை பார்த்துக்கோங்க என்று பதிவிட்டுள்ளார். அபிராமியின் இந்த பதிவு தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

அம்மா, தங்கை இருக்கும் போதே மார்பில் கை வைத்த நபர்: இளம் நடிகை பகிர்ந்த பகீர் தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.