திமுக இப்தார் விழாவில் பங்கேற்க துபாயிலிருந்து 1 நாள் விசிட் அடித்த நிர்வாகி! என்ன பின்னணி?

சென்னை: திமுக இப்தார் விழாவில் பங்கேற்பதற்காக துபாயிலிருந்து சென்னைக்கு 1 நாள் விசிட் அடித்து கட்சித் தலைமையின் கவனம் ஈர்த்திருக்கிறார் அமீரக திமுக நிர்வாகி ஒருவர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மீரான் அமீரக திமுக பொறுப்பாளராக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசின் புலம்பெயர் தமிழர் நல வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்தார் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் திமுகவில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் லண்டன் பைசல், துபாய் மீரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய திமுக பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டி துபாயிலிருந்து காலை புறப்பட்டு சென்னை வந்தடைந்த அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் அன்றைய தினமே இரவோடு இரவாக மீண்டும் அடுத்த விமானத்தை பிடித்து துபாய் சென்றடைந்திருக்கிறார்.

ஸ்டாலின் முன்னிலையில் ஒன்றரை நிமிடம் நன்றியுறை ஆற்றுவதற்காகவே, இவர் இவ்வளவு தூரம் 1 நாள் விசிட்டில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த வாரம் தான் துபாயில் அமீரக திமுக சார்பில் இப்தார் விழா நடத்தப்பட்டது. அதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.