கடவுள் குறித்து அவதூறு: தி.மு.க., நிர்வாகி மீது புகார்| Defamation of God: Complaint against DMK executive

ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரித்து, முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ள உடுமலை தி.மு.க., நிர்வாகி மீது, பா.ஜ., கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தி.மு.க., வில் மாவட்ட பிரதிநிதியாக உள்ள வஞ்சிக்குமார், அவரது பேஸ்புக் பக்கத்தில், ஹிந்து மதம் குறித்தும், இதன் மத நம்பிக்கைகள் குறித்தும், ஹிந்து மத கடவுள்களை மிகவும் கொச்சைப்படுத்தி வெளியிட்டுள்ளார்.

அவர் மீது, வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், என உடுமலை நகர பா.ஜ., கட்சித்தலைவர் கண்ணாயிரம் தலைமையில், ஒன்றியத்தலைவர் நாகமாணிக்கம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் தெய்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உடுமலை போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.