PS2: பொன்னியின் செல்வன் படத்திற்காக கார்த்தி வாங்கிய சம்பளம்..ரொம்ப கம்மியா இருக்கே..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

​தரம்தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றார் கார்த்தி. கடைசியாக கடந்தாண்டு கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் கார்த்தியின் நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்திலும் கார்த்தி நடித்து வருகின்றார். இப்படமும் ஒரு வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வருகின்றது

​வந்தியத்தேவன்மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது. இதில் வந்தியத்தேவன் என்ற மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி. முதலில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களை அணுகினார் மணிரத்னம். இறுதியாக அக்கதாபாத்திரத்தில் கார்த்தியை நடிக்கவைத்தார். பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்களிலேயே ஜாலியான வித்யாசமான கதாபாத்திரமான வந்தியத்தேவன் ரோலில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தார் கார்த்தி. பலரும் அவரது நடிப்பை புகழ்ந்து தள்ளினர். தற்போது வெளியாகவுள்ள இரண்டாம் பாகத்திலும் அவரது நடிப்பு பாராட்டை பெரும் என எதிர்பார்ப்படுகின்றது

​ப்ரோமோஷன்ஸ்ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி மணிரத்னம் உட்பட படக்குழுவினர் அனைவரும் தீவிரமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இதே போல தான் முதல் பாகத்திற்கும் படக்குழு தீவிரமான புரமோஷன்களில் ஈடுபட்டது. அதற்கு பலனாக படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூலித்து மிகப்பெரிய சாதனையை அடைந்தது. அதே போல பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது

​சம்பளம்பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி இதுவரை பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இருந்தாலும் கார்த்தி தன் சம்பளத்தை உயர்த்தாது சராசரியான சம்பளமே பெற்று வருவது கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரமான வந்தியத்தேவன் ரோலில் கார்த்தி நடித்திருந்தார். இதற்கு கார்த்தி ஐந்து கோடியே சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வந்துள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் ஒரு ஹீரோவான கார்த்தி ஐந்து கோடிதான் சம்பளமாக வாங்குகிறாரா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கேட்டு வருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.