உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வாட்ஸ்ஆப் பயனாளர் ஒருவர், ஒரே அக்கவுன்ட் மூலம் கூடுதலாக 4 செல்போன்களில் அதை பயன்படுத்தும் வசதியை மெட்டா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மொபைல் போனில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் கணக்கை மடிக்கணினிகளில் ஸ்கேன் செய்து உபயோகிக்கலாம். மேலும் ஒரே சமயங்களில் பல்வேறு மடிக்கணினிகளிலும் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும். இந்நிலையில் தற்போது பல்வேறு மொபைல் போன்களிலும் ஒரே வாட்ஸ் ஆப் கணக்கை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக ரீதியான வாட்ஸ் ஆப் கணக்கை பயன்படுத்துவோர் பெரிதும் பயன் அடைவர் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வாட்ஸ்ஆப் பயனாளர் ஒருவர் இன்வைட் லிங்கை கிளிக் செய்து எந்தவொரு குழுவுக்குள்ளும் நுழைய முடியும். ஆனால், இனி குரூப் அட்மினின் ஒப்புதல் இன்றி, புதிய நபர்கள் குழுவில் இணைய முடியாது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.