Ponniyin Selvan2: மீண்டும் அதை செய்த ஐஸ்வர்யா ராய்… திக்குமுக்காடிப் போன மணிரத்னம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மேடையில் ஐஸ்வர்யா ராய் செய்த காரியத்தால் நெகிழ்ந்து போயுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி , ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர். இதில் த்ரிஷா குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.​Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங்… எவ்வளவு வசூல் தெரியுமா?​
உச்சக்கட்டம்நடிகை ஐஸ்வர்யா ராய், நந்தினியாகவும் ஊமை ராணியாகவும் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், நடிகர் கார்த்தி வானர் குல அரசர் வந்தியத் தேவனாக நடித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி, அருண்மொழி வர்மனாக நடித்துள்ளார். படம் நாளை ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படக்குழுவினர் உச்சக்கட்ட புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
​அந்த லிஸ்ட்டில் சேர்ந்த சமந்தா!​
மும்பையில்…அதன் ஒரு பகுதியாக மும்பையில் பொன்னியின் செல்வன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் மணிரத்னம் நடிகர் விக்ரம் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
​Aishwarya Rai: பிரமிக்க வைக்கும் பேரழகு… ஐஸ்வர்யா ராயின் அசத்தல் போட்டோஸ்!​
அன்பு அதிகம்அப்போது மணிரத்னம் ஐஸ்வர்யா ராய் பற்றி கூறுகையில், இயக்குநர்கள் மிகவும் சுயநலவாதிகள், அவர்களுடைய படத்தின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். நான் ஐஸ்வர்யா ராயின் மீது நிறைய அன்பு வைத்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் அவரை அணுகுவேன். ஒவ்வொரு முறை நான் அவரை அணுகும் போதும் அவர் ஓகே சொல்லிவிடுவார் என்றார் மணிரத்னம்.
​Nayanthara: நயன்தாராவை நடுரோட்டில் அழவிட்டேன்… மனம் திறந்த விக்னேஷ் சிவன்!​
ஐஸ்வர்யா ராயின் திறமைமேலும் இந்த வாய்ப்பு அவருடைய அதிர்ஷ்டத்தால் கிடைத்தது இல்லை என்றும் முழுக்க முழுக்க அவருடைய திறமையால் கிடைத்தது என்றும் கூறினார். ஐஸ்வர்யா ராயின் பர்சனாலிட்டியும் அவருடைய அணுகு முறையும் இந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தும் என்றும் நம்பியதாலேயே அவரை அணுகியதாகவும் கூறினார் இயக்குநர் மணிரத்னம்.
​Meena: 46 வயசா… இது ஒன்னே போதும்.. இன்னொரு ரவுண்ட் வரலாம்.. மீனாவோட லேட்டஸ்ட் வீடியோ!​
காலில் விழுந்த ஐஸ்வர்யா ராய்இயக்குநர் மணிரத்னம் இப்படி பேசியதும் நெகிழ்ச்சியடைந்த ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன போதே நடிகை ஐஸ்வர்யா ராய் மணி ரத்னத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். தற்போதும் அதையே செய்து திக்குமுக்காட செய்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
​பெண்களையும் பெரு மூச்சு விட வைக்கும் த்ரிஷா!​
Aishwarya Rai

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.