Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தை ஒத்த வார்த்தையில் விமர்சித்த ரசிகர்கள்: என்ன வார்த்தை தெரியுமா?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Ponniyin Selvan 2 theatre goers review: பொன்னியின் செல்வன் 2 படத்தை ஒரே வார்த்தையில் விமர்சனம் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள். அது மணிரத்னத்துக்கு சாதகமான வார்த்தை தான்.

​பொன்னியின் செல்வன் 2​Ponniyin Selvan 2: இது, இதுக்காகவே பொன்னியின் செல்வன் 2 படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
அந்த படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என பலரும் தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்த அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை பயங்கரம் தான்.

​விமர்சனம்​படம் பயங்கரமாக இருக்கிறது, சான்ஸே இல்லை. மணிரத்னம் சார் வேற லெவலில் எடுத்திருக்கிறார். எப்படி இந்த மாதிரி எல்லாம் படம் எடுக்க முடியும் என யோசிக்க வைத்துவிட்டார் மணிரத்னம். இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் பொன்னியின் செல்வன் 2 தான் என்று அடித்துச் சொல்கிறோம். படம் பார்த்து மிரண்டுவிட்டோம், பிரமித்தோம். விக்ரம், ஐஸ்வர்யா ராயின் காட்சியை பார்த்து தானாக கண்ணீர் வந்துவிட்டது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
​ரசிகர்கள்​பொன்னியின் செல்வன் நாவலை எல்லாம் மணிரத்னத்தால் படமாக எடுக்க முடியாது என நினைத்தோம். ஆனால் அருமையாக எடுத்திருக்கிறார். அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி திறம்பட நடித்திருக்கிறார். நந்தினி- குந்தவை சந்திக்கும் காட்சி வேற லெவல். வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்துவிட்டது. பொன்னியின் செல்வன் 2- பயங்கரம் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
​பாகுபலி 2​பாகுபலி 2 படத்தை விட பொன்னியின் செல்வன் 2 படம் நன்றாக இருக்கிறது. சொல்லப் போனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் சிறப்பாக உள்ளது. படம் வேற லெவலில் இருக்கிறது. விவரிக்க வார்த்தைகளே இல்லை என படம் பார்த்தவர்கள் சந்தோஷமாக தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

​மணிரத்னம்​பாகுபலி படத்தை ராஜமவுலி இரண்டு பாகங்களாக எடுக்கவில்லை என்றால் பொன்னியின் செல்வன் படம் வந்திருக்காது என இயக்குநர் மணிரத்னம் ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்நிலையில் பாகுபலி 2 படத்தை விட பொன்னியின் செல்வன் 2 படம் நன்றாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

​Ponniyin Selvan 2: பாகுபலி வரலைனா பொன்னியின் செல்வன் வந்திருக்காது: மணிரத்னம்

​விளம்பரம்​பொன்னியின் செல்வன் 2 படத்தை எடுத்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை மணிரத்னம். சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரை பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைத்து படத்தை விளம்பரம் செய்தார். அந்த விளம்பர நிகழ்ச்சிகளில் தன் அழகால் அனைவரையும் கவர்ந்தார் த்ரிஷா. ஜெயம் ரவியும், கார்த்தியும் தங்களின் பேச்சால் கவர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

​Ponniyin Selvan 2: நரை முடி பற்றி கேட்ட செய்தியாளர்கள்: வேற மாதிரி பதில் சொன்ன ஜெயம் ரவி, சிரித்த படக்குழு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.