ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : பி.வி. சிந்து காலிறுதி சுற்றில் தோல்வி..!

துபாய்,

துபாயில் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் கடந்த 25-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்று வருகின்றன.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தென் கொரியாவின் அன் சே யங் விளையாடினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை கைப்பற்றிய சிந்து ,பின்னர் 2 செட்களை தவற விட்டார். இதனால் 21-18, 5-21, 9-21 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.இதனால் அவர் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.