கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மாவட்டங்களில் 64 முதல் 115 மில்லி மீட்டர் வரை மழைப் பொழிவு இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.