மதுரை இன்று அதிகாலை 5.51 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியுள்ளார். மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவாக சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி கள்ளழகர் வேடம் புரிந்து, தங்கப் பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மதுரை புறப்பட்டார். அழகர் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் வாசலில் சிறப்புப் பூஜைக்குப் பின், அங்கிருந்து புறப்பட்டு, […]