STR 48: சிம்புவுடன் ஜோடி சேர போகும் தீபிகா படுகோனே.?: பரபரக்கும் கோலிவுட்.!

சிம்புவின் 48 ஆவது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. தேசிங்கு பெரிசாமி இயக்கவுள்ள இந்தப்படத்தை உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் நாயகி குறித்த தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பல்வேறு சறுக்கலை சந்தித்த சிம்பு ‘மாநாடு’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் வேற லெவல் வெற்றியடைந்தது. இந்தப்படத்தை தொடர்ந்து தனது ஆஸ்தான இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார். ‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படங்களின் வெற்றியை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் சிம்பு. இதனிடையில் தான் சிம்பு ஏற்கனவே கமிட் ஆன ‘பத்து தல’ படம் அண்மையில் ரிலீசானது. கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ‘மப்டி’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவானது. ‘சில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இந்தப்படத்தை இயக்கினார்.

Vijay: விஜய்க்கு ஜோடியாகும் 19 வயது நடிகை.?: ‘தளபதி 68’ படத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்.!

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த மிரட்டலான தாதா கெட்டப்பில் தமிழில் சிம்பு நடித்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது ‘பத்து தல’ படம். இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார் சிம்பு. இந்நிலையில்தான் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது.

Actor Saravanan: ‘பருத்திவீரன்’ சரவணன் மீது பரபரப்பு புகார்: பகீர் கிளப்பிய மனைவி.!

இந்தப்படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்தப்படத்தில் ஒருசில வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்திற்காக அவர் சிம்புவை விட அதிகளவு சம்பளம் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.