Ajith: விடாமுயற்சி படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கவுள்ள திரைப்படம்..இவர்தான் ஹீரோவா ?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

​வாய்ப்புதடையற தாக்க, தடம் போன்ற தரமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான மகிழ் திருமேனி அடுத்ததாக அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற படத்தை இயக்கவுள்ளார். அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக இருந்த நிலையில் பின்னர் சில பல காரணங்களால் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இப்படத்தில் ஒப்பந்தமானார். கடந்த ஐந்து மாத காலமாக கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மகிழ் திருமேனி அஜித்திடம் முழு கதையையும் கூறி ஓகே செய்துள்ளார். தற்போது இம்மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

​அறிவிப்புதுணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜனவரி மாதமே அஜித்தின் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ள செய்தி கசிய துவங்கின. ஆனாலும் இதைப்பற்றி படக்குழு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. ஏனென்றால் அஜித் முழு கதையையும் கேட்ட பின்னரே தான் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். எனவே தான் கடந்த ஐந்து மாதமாக கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மகிழ் திருமேனி அஜித்திடம் கதையை கூறியுள்ளார். அக்கதையில் அஜித்திற்கு முழு திருப்தி ஏற்படவே படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

​எதிர்பார்ப்புபொதுவாக மகிழ் திருமேனியின் படம் என்றாலே ஆக்ஷன் திரில்லர் ஜானவரில் தான் இருக்கும். அதைப்போல தான் விடாமுயற்சி திரைப்படமும் ஹாலிவுட் தரத்தில் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. என்னதான் இப்படத்தின் டைட்டில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படத்திற்காக அஜித் புது கெட்டப்பிற்கு மாறி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் அஜித்திற்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றதாம். தமிழ் சினிமாவை ஹிட் ஜோடிகளின் வரிசையில் இடம்பெறும் அஜித் மற்றும் நயன்தாரா மீண்டும் இப்படத்தின் மூலம் இணைவது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது
​அடுத்த படம்மகிழ் திருமேனி அஜித்தை இயக்குகிறார் என்றவுடன் அவரது மார்கெட்டும் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து மே மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை துவங்கி நவம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட மகிழ் திருமேனி பிளான் போட்டுள்ளார். இதையடுத்து அடுத்தாண்டு துவக்கத்தில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்துவிட்டு தன் அடுத்த பட வேலைகளை எந்த வித தாமதமும் இன்றி துவங்கவுள்ளார் மகிழ். இந்நிலையில் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிம்பு தற்போது அவரது கரியரில் ஏறுமுகத்தில் இருப்பதால் அவரின் அடுத்தடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி மற்றும் சிம்பு இணையவுள்ளதாக வந்த செய்தி ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.