The first phase of construction of Ram temple will be completed in December | ராமர்கோயில் கட்டுமானம் முதற்கட்ட பணிகள் டிசம்பரில் நிறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதற்கட்ட பணிகள் வரும் டிசம்பரில் நிறைவடையும் என கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடக்கின்றன. கடந்த 2020 ஆக., 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமான பணி நடந்து வருகிறது.

latest tamil news

கோயில் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகன நிலையில், இன்று கோயில் கட்டுமான கமிட்டியின் தலைமை நிர்வாகி நிர்பேந்திரா மிஸ்ரா கூறியது,

கோவில் கட்டுமானத்தின் முதற்கட்ட பணிகள் இந்தாண்டு டிசம்பர் 30ம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும். திட்டமிட்ட வேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் மக்கள் தரிசனம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.