Sarath Babu: ஈடுகட்ட முடியாத இழப்பு.. நெருங்கிய நண்பரின் மறைவால் கலங்கிப்போன ரஜினி.!

நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் சரத்பாபு. இவரது மரணம் திரைத்துறையினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சரத்பாபுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சரத்பாபு. தமிழில் ரஜினி, கமலுடன் இணைந்து நடித்துள்ளார். முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை உள்ளிட்ட ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை. கமலுடன் இணைந்து ‘சலங்கை ஒலி’ படத்தில் நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்த முல்லை’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக சரத்பாபுவின் உடல் மோசமடைந்து வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் சரத்பாபுவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vikram: பிரபல இயக்குனரின் பரபரப்பு குற்றச்சாட்டு: உண்மையை போட்டுடைத்த விக்ரம்.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில், தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறித்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாட்டும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்திருந்தார்.

விஜய் சேதுபதி படம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்: இப்படியொரு நிலைமையா.?

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘என்னுடைய நெருங்கிய நண்பர் அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.